For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய டாக்டர்கள் நியமனம் ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக டாக்டர்களை அரசுப் பணியில் சேர்க்கும் தொடங்கிவிட்டது.

அரசு டாக்டர்களின் போராட்டத்தை சமாளிக்க தாற்காலிகமாக மருத்துவர்களை சேர்க்கும் பணியைஆரம்பிக்குமாறு மாவட்ட கலெக்டர்ளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வேலையை மதுரை கலெக்டர் உடனடியாக ஆரம்பித்துவிட்டார். நேற்றே இந்த ஆள் சேர்ப்புப் பணிதொடங்கப்பட்டுவிட்டது. மதுரை மருத்துவமனையின் டீன் பாலதிருஷ்ணராவ், மாவட்ட சுகாதாரத்துறைஇயக்குனர் இளங்கோ ஆகியோர் இதற்கான இன்டர்வீயூக்களை நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யஆரம்பித்துள்ளனர்.

பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 75 பெண் டாக்டர்கள் உளபட 200 பேர் அரசு வேலை கோரிவிண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று முதல் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

இவர்களுக்கு தினமும் ரூ. 500 ஊதியமும், அறுவை சிகிச்சை செய்தால் ரூ. 1000மும் வழங்கப்படும்.

எச்சரிக்கையையும் மீறி அரசு டாக்டர்கள் போராட்டம் செய்தால் இந்த தாற்காலிக மருத்துவர்களையே அடுத்த 2ஆண்டுகளுக்கு காண்ட்ராக்டில் வேலையில் நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்பவர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக மாதம் ரூ. 8,000 ஊதியத்தில் 2 ஆண்டுகாண்ட்ராக்டில் அவர்கள் அரசு டாக்டர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

மதுரையைத் தொடர்ந்து திருச்சி, சென்னை மாவட்டங்களிலும் இந்த ஆள் சேர்ப்பு தொடங்கிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X