மருத்துவ மாணவர்களுடன் இனிமேல் பேச்சே கிடையாது: செம்மலை திட்டவட்டம்
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் தேவையான அளவு பேசியாகி விட்டது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கேஇடமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த அரசு டாக்டர்கள் தங்களது போராட்டத்தை திடீர் என்று கைவிட்டுள்ளனர்.
இந்த முடிவை இன்று சங்கத் தலைவர் டாக்டர் பிரகாசம் தலைமையிலான டாக்டர்கள் சங்கத்தினர் செம்மலையைப்நேரில் சந்துத்துத் தெரிவித்தனர். அவர்களுக்கு செம்மலை நன்றி தெவித்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செம்மலை பேசுகையில், அரசு மீது நம்பிக்கை வைத்து டாக்டர்கள் தங்களதுபோராட்டத்தை விலக்கிக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது.
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆசான்களாக விளங்கும் அரசு டாக்டர்களே போராட்டத்தை வாபஸ்பெற்றுக் கொண்டுள்ள நிலையில், மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவதே நல்லது.
அவர்களுடன் தேவையான அளவுக்கு பேசியாகி விட்டது. அவர்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகள்நறைவேற்றப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. இன்று கூட தஞ்சை மருத்துவக் கல்லூரியில்தொடங்கப்பட்டுள்ள 5 மருத்துவ மேல் படிப்புக்கான அங்கீகாரம் வாங்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் உடனடியாக வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும். இனிமேலும் அவர்களுடன் பேச்சு நடத்தஅரசு தயாராக இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications