For Quick Alerts
For Daily Alerts
Just In
கேரள அணையில் மூழ்கி 3 கோவை மாணவர்கள் பலி
கோவை:
கேரள மாநிலம் வாலையாறு அணையில் மூழ்கி 3 தமிழக மாணவர்கள் இறந்தனர்.கோவை சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 6 மாணவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு அருகேஉள்ள வாலையாறு அணைக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
காலை 11 மணிக்கு அங்கு சென்ற அவர்கள், மதியம் 2 மணியளவில் அணையில் இறங்கிக்குளித்தனர். அப்போது பிளஸ் டூ படித்து வந்த கார்த்திகேயன், பரமேஸ்வரன் மற்றும் பொறியியல்கல்லூரி மாணவர் ரமேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர்.
அவர்களை பிற மாணவர்களால் காப்பாற்ற முடியவில்லை. மூவரும் மூச்சித் திணறிஇறந்துவிட்டனர். காவல் துறையினரும் தீயணைப்புப் படையினரும் கடும் போராட்டத்துக்கு பின்னர்தான 3 பேரின் உடல்களையும் மீட்க முடிந்தது.
Comments
Story first published: Thursday, May 22, 2003, 5:30 [IST]