திடீர் பிரண்ட்ஸ்: மருத்துவ மாணவர்களுக்கு விட்டுத் தரும் அரசு
சென்னை:
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்குவதாகஇருந்த தேர்வுகள் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இன்றே பலமாணவர்கள வகுப்புகளுக்குத் திரும்பிவிட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக இவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் அமைச்சர் செம்மலையிடம் சில புதிய கோரிக்கைளைவிடுத்தனர். அதில், தங்களது தேர்வுகளை ஒத்திவைக்குமாறும், கல்லூரியில் சேர இரு வாரஅவகாசம் தருமாறு கேட்டனர்.
இதை செம்மலை ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜூன் 2ம் தேதி தொடங்குவதாக இருந்ததேர்வுகள் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத்தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு எழுத தடை விதிக்கப்பட்ட 1,200 மாணவர்கள் மீதான நடவடிக்கையும் ரத்துசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தவிர கல்லூரிக்கு வரும் ஜூன் 1ம் தேதி முதல் வந்தால் போதும், 8 நாட்கள் ஓய்வெடுத்துவிட்டுமாணவர்கள் வரலாம் என்றும் அறிவித்தள்ளார்.