எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்ட கைதி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் வேலூர் மத்திய சிறைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள்இறந்துள்ளனர்.
ஆரணியைச் சேர்ந்த சங்கர் ஒரு கொள்ளை வழக்குத் தொடர்பாக சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படவே சென்னைராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,
அப்போது அவருக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்தது. இதனால் தொடர்ந்துமருத்துவமனையிலே வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்று அவர் இறந்தார்.
அதேபோல, வேலூர் மத்திய சிறையில் இருந்த இன்னொரு கைதியான தேவன் காசநோயால்பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல்அவரும் இன்று இறந்தார்.












Click it and Unblock the Notifications