For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பா சோகம்: விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 நிவாரணம் தர தமிழக அரசு முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியில் கர்நாடகம் நீர் தர மறுத்ததாலும், மழை பொய்த்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,000 நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு முன் வந்துள்ளது. அடுத்த வாரம் இந்த நிவாரண நிதி வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் சம்பா தவிர குறுவை மற்றும் தாளடி பயிர்களும் பாதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், சம்பா பயிர்இழப்புக்கு மட்டுமே நிவாரணம் தர தமிழக அரசு முன் வந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ. 332 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. இதனுடன் மேலும்ரூ. 18 கோடியை சேர்த்து ரூ. 350 கோடியை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

இது குறித்து தமிழக வருவாய்த்துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை தவிர்த்த 29 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடும் வறட்சியால் சம்பா பயிர் விளைச்சலே இல்லாமல் போனது. சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதனால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 1,000 வீதம் நிதியுதவி வழங்கப்படும். அதிகபட்சம் 5 ஏக்கர் வரை நிவாரணம்வழங்கப்படும். ரு விவசாயிக்கு ரூ. 5,000க்கு மேல் நிவாரணம் வழங்கப்படாது.

அடுத்த வாரம் முதல் இந்த நிவாரண உதவி வினியோகம் ஆரம்பிக்கப்படும் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X