For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் வெயிலுக்கு 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் நிலவும் கடும் வெயிலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கத்திரி வெயில் மிகக் கடுமையாக உள்ளது. சென்னை நகரில் குறைந்தபட்சமே 105டிகிரி வெயில் அடித்து வருகிறது. இதனால் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

வெயில் கொடுமைக்கு சென்னையில் மட்டும் 2 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூரைச் சேர்ந்த வேணுகோபால் என்ற இளைஞர் தாம்பரம் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். கடும் வெயிலில் நின்று கொண்டிருந்த அவர் தலை சுற்றி மயங்கி விழுந்தார். அந்தஇடத்திலேயே அவர் பலியானார்.

அதேபோல மாங்காடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரும் சாலையிலேயேசுருண்டு விழுந்து இறந்தார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

முன்னதாக இந்த வெயிலுக்கு தமிழகத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இப்போது பலியானோர்எண்ணிக்கை 5 ஆகிவிட்டது.

வழக்கம்போல் அரக்கோணத்தில் தான் கடும் வெயில் அடித்து வருகிறது. அங்கு நேற்றும் 113 டிகிரிவெயில் பதிவாகியுள்ளது.

100 டிகிரிக்கு மேல் வெப்பம் பகுதிகள் விவரம்:

வேலூர்- 110 டிகிரி

பாளையம்கோட்டை- 107 டிகிரி

சென்னை- 105 டிகிரி

பாண்டிச்சேரி- 105 டிகிரி

கடலூர்- 104 டிகிரி

மதுரை- 102 டிகிரி

நாகப்பட்டிணம்- 102 டிகிரி

கோவை- 100 டிகிரி

திருச்சி- 100 டிகிரி

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே கடும் வெப்பம் நிலவுகிறது. ஆந்திராவில் கடும் வெயிலுக்கு இதுவரை370 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிகிறது. வழக்கமாக குளிர் நிலவும் பெங்களூரில் கூட 99 டிகிரி வெப்பம் நிலவஆரம்பித்துள்ளது.

நாளையுடன் அக்னி நட்சத்திர காலம் முடிவடைவதால் வெயில் குறைய ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கைஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X