இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்: திருச்சியில் அறிமுகம்- விரைவில் மதுரை, தூத்துக்குடிக்கும் விரிவாக்கம்
திருச்சி:
இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி திருச்சியிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 40 நகரங்களில் இந்த முறையிலான டிக்கெட் ரிசர்வேசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் நகரங்களைத் தொடர்ந்து திருச்சியில் இந்த முறை அறிமுகமாகியுள்ளது.
இன்டெர்நெட்டில் தென்னக ரயில்வேயின் இணையத் தளத்திலும், http://www.irctc.co.in என்ற தளத்திலும் கிரெடிட்கார்ட் மூலம் டிக்கெடுக்களை வாங்கலாம். இந்த டிக்கெட்கள் கொரியர் மூலம் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்.
திருச்சியில் இத் திட்டத்தை தென்னக ரயில்வேயின் மண்டல மேலாளர் கஸ்தூரி ரங்கன் துவக்கி வைத்தார்.
டிக்கெட்டுகளை மூன்று நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரைஇதில் முன் பதிவு செய்யலாம். டிக்கெட் ரிசர்வ் செய்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் திருச்சி ரயில்வேஅலுவலகத்தை 2468603 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வரும் ஜூன் மாத இறுதிக்குள் மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி, ராஜபாளையத்திலும் இன்டர்நெட் முறையிலானரயில் டிக்கெட் முன் பதிவு தொடங்கப்படும் என்று தெரிகிறது.