For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் தமிழகத்தை தாக்கிய 93 ஆண்டு கடும் வெப்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கத்திரி வெயில் முடிந்து விட்டதே என்ற நிம்மதியைக் குலைக்கும் வகையில், சென்னை நகரில்இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று பயங்கர வெப்பம் தாக்கியது.

93 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தைத் தாக்கிய பயங்கர வெப்பம் நேற்றும் மீண்டும் தாக்கியது.சென்னையில் இந்த ஒரே கோடையில் முதன்முதலாக 112 டிகிரி பாரன்ஹீட் வெயில் இரண்டு முறைபதிவாகிவிட்டது.

அரக்கோணத்தில் இன்னும் அதிகமாக 113 டிகிரி வெப்பம் பதிவானது. அரக்கோணத்தில் இந்தவெப்பம் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கொண்டுள்ளது.

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் முடிந்து விட்டது. இதனால் வெப்பநிலைபடிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கத்திரி முடிவுக்கு வந்த அடுத்த நாளே, வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலைபதிவானது.

நேற்றைய சென்னை நகரின் வெப்பநிலை 112 டிகிரி ஆகும். கடந்த 93 ஆண்டுகளில் இதுபோலகடும் வெயில் தமிழகத்தை 3 முறை தான் தாக்கியுள்ளது.

93 ஆண்டுகளுக்கு முன் அதாவது, 1910ம் ஆண்டு மே 21ம் தேதிதான் அதிகபட்சமாக 112 டிகிரிவெயில் பதிவானது. இதன் பிறகு 1980ம் ஆண்டு மே 25ம் தேதி 112 டிகிரி வெப்பம் பதிவானது.

அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து இந்த ஒரே மாதத்தில் (22 மற்றும் 29ம் தேதிகளில்) இரண்டுமுறை 112 டிகிரி வெப்பம் பதிவாகிவிட்டது.

வட மேற்கு பருவக் காற்று ஈரப்பதம் இன்றி காணப்படுவதால் அனல் காற்றும், கடும் வெப்பநிலையும் நீடிப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை மேலும் சிலநாட்களுக்கும் நீடிக்குமாம்.

கடும் வெப்பத்துக்கு இடையிலும் மீனம்பாக்கம், கிண்டி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் மாலையில்லேசான மழை பெய்தது.

சென்சுரி போட்ட மற்ற இடங்கள்:

வேலூர்- 110 டிகிரி

நாகப்பட்டிணம்- 106 டிகிரி

பாளையம்கோட்டை- 103 டிகிரி

மதுரை- 101 டிகிரி

திருச்சி- 100 டிகிரி

சேலம்- 100 டிகிரி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X