45 நாட்களுக்கு பின் மீண்டும் மீன்களை தேடி..
ராமேஸ்வரம்:
45 நாள் அரசு தடைக்குப் பின்னர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11ம் தேதிமுதல் மே 31ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில், மீன்களின் இனப்பெருக்க காலமாதலால், அச் சமயத்தில் மீன் பிடிக்க அரசு தடைவிதிக்கிறது.
மீன் வளத்தைப் பெருக்க இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான தடை இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் நூற்றுக்கணக்கான பேர்கடலுக்குள மீன் பிடிக்கச் சென்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடலுக்குள் போவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
பல ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் சமீபகாலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட காரணத்தால் மீன் பிடிக்கப்போகாமல் புறக்கணித்தும் வந்துள்ளனர்.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீன்பிடிக்ப் போகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications