எம்.பி.பி.எஸ்: தமிழக மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகம்
சென்னை:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் விற்பனை இன்று முதல் தொடங்கியது.
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் முதலாவது ஆண்டில் சேருவதற்கான இந்த விண்ணப்பப் படிவவிற்பனை ஜூன் 10ம் தேதி வரை நீடிக்கும்.
புதிய மருத்துவக் கல்வி இயக்குனர்:
இதற்கிடையே, தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் பதவியிலிருந்து டாக்டர் சி.ரவீந்திரநிாத் இன்றுஓய்வு பெறுவதால், புதிய இயக்குநராக டாக்டர் விஜயலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.
மருத்துவக் கல்வி இயக்குனர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் விஜயலட்சுமி, தற்போதுசென்னை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்தார். இதற்கு முன் கோவை மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரிகளின் டீனாக பணியாற்றியுள்ளார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் டாக்டர் ரவீந்திரநாத், தனது பதவிக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக், மாணவர்கள் ஸ்டிரைக் ஆகியவற்றை சந்திக்க நேர்ந்ததுகுறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க அரசுக்கு முழு அளவில் ஆதரவாக நின்றார் ரவீந்திரநாத். இதனால்அவருக்கு விரைவில் அரசின் கெளரவப் பதவி ஏதாவது வழங்கப்படலாம் என்று தெரிகிறது.