விபச்சார பெண்களிடம் சென்ற லாரி டிரைவர் மர்ம சாவு
புதுக்கோட்டை:
சாலையோரத்தில் நின்று விபச்சாரத்துக்கு அழைத்து பெண்ணிடம் சென்ற லாரி டிரைவர் மர்மமான முறையில்கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து லாரியை ஓரம் கட்டிவிட்டு டிரைவர்கள் சாலையோர இருட்டில் ஒங்குவார்கள்.
இந் நிலையில் புதுக்கோட்டை அருகே இப்படி விபச்சாரத்துக்கு அழைத்த பெண்ணிடம் சென்ற டிரைவல்கொல்லப்பட்டுக் கிடந்தார்.
பாண்டிச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ஏழுமலை (27) என்பவர் ஓட்டிச் சென்றார். நள்ளிரவு 1 மணியளவில்விராலிமலை அருகே 2 பெண்கள் லாரியை நோக்கி சிக்னல் காட்டினர். இதையடுத்து ஏழுமலை லாரியைநிறுத்தினார்.
கிளீனரிடம் லாரியைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு இறங்கி அந்தப் பெண்களுடன் இருட்டுக்குள் சென்றார்.நெடுநேரமாகியும் ஏழுமலை திரும்பி வரவலிலை. இதையடுத்து காலை 5 மணியளவில் கிளீனர் அந்தப் பகுதியில்ஏழுமலையைத் தேட ஆரம்பித்தார்.
அப்போது 200 அடி தொலைவில் புதருக்குள் ஏழுமலை நிர்வாணமான நிலையில் பிணமாகிக் கிடந்தார்.உடலெங்கும் ரத்தம் வழிந்திருந்தது.
வழக்கமாக இப்படி இருட்டில் ஒதுங்கும்போது டிரைவர்களின் செயின், மோதிரம், வாட்ச்சை விபச்சாரப்பெண்களின் துணைக்கு வரும் அடியாட்கள் பறிப்பது வழக்கம். அப்படி ஏதாவது பறிக்க முயன்று ஏழுமலைஅதைத் தடுத்தபோது தகராறில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.