இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானி பலி
உத்தராலி (ராஜஸ்தான்):
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-21 போர் விமானம் இன்று விழுந்து நொறுங்கியது. இதில் விமாழிகொல்லப்பட்டார்.
ராஜஸ்தானில் உத்தராலி என்ற இடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து அந்த விமானம் வழக்கமானபயிற்சிக்காகப் புறப்பட்டது. பிளைட் லெப்டினண்ட் ஏ.எஸ்.ஜாம்வால் அதனை இயக்கிச் சென்றார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து அந்த விமானம் பார்மர்மாவட்டத்தில் வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி ஜாம்வால் உயிரிழந்தார். அந்த நேரத்தில்தரையில் யாரும் இல்லாததால் மற்ற உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.
மிகக் குறைவான உயரத்தில் பறப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விமானி தனது கட்டுப்பாட்டைஇழந்துவிட்டதாகவும் இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானத்தின் சிதைந்த பாகங்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் பரவிக் கிடக்கின்றன.
இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கும் விமானப் படை உத்தரவிட்டுள்ளது. இன்று விபத்துக்குள்ளான மிக்-21மிகப் பழையதாகும். இந்த ரக விமானங்களை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக படையில் இருந்து வெளியேற்றிவருகிறது.
இந்திய விமானப் படையில் உள்ள மிக் 21 மற்றும் 23 ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகிவிமானிகளின் உயிர்களைப் பலிவாங்கி வருகின்றன.