வறண்டன குற்றால அருவிகள்!
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுத்தமாக தண்ணீர் வரத்து நின்று போய் அருவிகள்வறண்டுவிட்டன. இதனால் குற்றால சீசன் பாதியிலேயே முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாகி விட்டது. மே மாதத் தொடக்கத்திலேயே தென் கேரளப்பகுதிகளில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டியது.
இதைத் தொடர்ந்து, இந்த முறை சீசன் முன் கூட்டியே தொடங்கி விட்டதாக மக்கள மகிழ்ச்சிஅடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குற்றாலத்துக்குப் படை எடுத்தனர்.
ஆனால், இந்த மாத இறுதி வரை நீர் கொட்ட வேண்டிய அருவிகள் இப்போதே வறண்டுவிட்டன.இந்தப் பகுதிகளில் மழை பெய்யாமல் போனதே அருவிகள் காய்ந்து போனதற்குக் காரணம்.
தண்ணீரே இல்லாமல் வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன. இதனால் குற்றலாத்தில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் முழுமையாகக் குறைந்துவிட்டது. சீசனை நம்பி ஏலத்துக்கு கடைகள்எடுத்தவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மேற்கு பருவ மழை பெய்தால்தான் குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டும், அருவிகளில்தண்ணீர் வெள்ளமெனக் கொட்டும். ஆனால் இந்த முறை தென் மேற்கு பருவ மழை 10நாட்களுக்குத் தள்ளிப் போகும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
எனவே, இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் குற்றால அருவிகளில் நீர் கொட்ட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications