கட்டட இடிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி வழக்கு
சென்னை:
ஆட்டம் கண்ட 8 மாடி கட்டடத்தின் மேல் 3 மாடிகளை சென்னை மாநகராட்சி இடிப்பதை எதிர்த்துநடிகை ஸ்ரீதேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர் சி.ஐ.டி.காலனி பகுதியில், ஸ்ரீதேவியும் சாந்தி பில்டர்ஸ் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனமும் இணைந்து 8 மாடி ஃபிளாட்டுகளை கட்டி விற்றுள்ளனர்.
4 மாடிகளே கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கீகாரம் இல்லாமல் மேலும் மாடிகளை ஸ்ரீதேவிமற்றும் சாந்தி பில்டர்ஸ் நிறுவனத்தினர் கட்டினர்.
இந் நிலையில் அஸ்திவாரம் பளு தாங்காமல் ஆட்டம் கண்டது. முக்கிய தூண் ஒன்று இடிந்துவிழுந்தது. இதனால் கட்டடமே இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 3 மாடிகளை இடிக்க சென்னை மாநகராட்சிஉத்தரவிட்டது. ஆனால் கட்டடத்தை இடிக்க ஸ்ரீதேவி முன் வராததால் மாநகராட்சியே அதை இடித்துவருகிறது.
இந் நிலையில் இந்த இடிப்பை எதிர்த்து ஸ்ரீதேவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
கட்டடத்தின் இடிந்த தூண் பகுதியை சரி செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். ஆனால்,அதற்கும் கூட அவகாசம் தரப்படவில்லை.
சம்பந்தப்பட்ட கட்டடத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. அவசரப்பட்டுகட்டடத்தை இடிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே இதற்கு உடனே இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications