மருமகளை ஆசைக்கு நெருக்கிய மாமனார்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காமப் பேய் பிடித்து ஆட்டிய மாமனார் ஒருவர், தனது மருமகள் ஆசைக்கு இணங்காத காரணத்தால் அவரைகத்தியால் குத்தினார். தடுக்க வந்த மகனையும் கத்தியால் குத்தினார். இப்போது அந்த மாமனார் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சென்னை ராயபுரம் ஆட்டுத் தொட்டி தெருவில் வசித்து வருபவர் பாலகொண்டய்யா. இவரது மகன் வெங்கட்ராவ்.வெங்கட்ராவின் மனைவி வத்சலா. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

மீசை நரைத்தும் (வயது 65) ஆசை நரைக்காத பால கொண்டய்யா தனது மருமகள் மீதே காமப் பார்வையைவீசினார். அடிக்கடி ஆசைக்கு இணங்கும்படி கூப்பிட்டுத் தொல்லை தந்துள்ளார். ஆனால், மாமனாரைக் கண்டித்தஇதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்பதால் வத்சலா அமைதியாக இருந்து வந்தார்.

ஆனால், மாமனாரின் தொல்லை எல்லையை மீறவே தனது கணவரிடம் வசந்தா இந்த அசிங்கத்தைத்தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் வெங்கட்ராவ் தனது அப்பாவை கண்டித்துள்ளார். இது போல நடந்துகொண்டால் வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்று எச்சரித்தார்.

இந் நிலையில் இரவு வத்சலா தூங்கிக் கொண்டிருந்தபோது, பால கொண்டய்யாவுக்கு காம வெறி பிடித்தது. தூங்கிக்கொண்டிருந்த வத்சலாவை எழுப்பி வற்புறுத்தியுள்ளார். அவர் கூச்சல் போட்டவே கோபமடைந்த மாமனார்கத்தியால் வத்சலாவை குத்தினார்.

கூச்சலிட்ட வத்சலாவின் குரல் கேட்டு வெங்கட்ராவ் எழுந்தார். கத்தியும், கையுமாக தந்தை இருப்பதைப்பார்த்தஅவர், தந்தையைத் தடுக்க முயன்றார். ஆனால் ஆத்திரம் கண்ணை மறைக்க மகனையும் கத்தியால் குத்தினார் பாலகொண்டய்யா.

மிகவும் சிரமப்பட்டு அவரை பிடித்து அமுக்கிய வெங்கட்ராவ் பின்னர் தந்தையை போலீஸில் ஒப்படைத்தார்.போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

கத்திக் குத்தில் காயமடைந்த வத்சலா மற்றும் வெங்கட்ராவ் இருவரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+