கருணாநிதிக்குப் போட்டியாய் காளிமுத்துவின் தொல்காப்பியம்: ஜெ. வெளியிட்டார்
சென்னை:
சபாநாயகர் காளிமுத்து எழுதியுள்ள தொல்காப்பிய இலக்கிய கொள்கைகளும், குருந்தொகையும்என்ற புத்தகத்தின் திருத்திய பதிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
டாக்டர் பட்டம் பெறுவதற்காக காளிமுத்து எழுதிய ஆய்வுத் தாள்களின் தொகுப்பே இந்தப்புத்தகமாகும். ஏற்கனவே இந்தப் புத்தகம் வெளி வந்துவிட்டது.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா புத்தகத்தை வெளியிட்டார்.
இந் நிலையில் தான் காளிமுத்துவின் பழைய புத்தகத்திலேயே மேலும் சில விவரங்களைச் சேர்க்கவைத்து திருத்திய பதிப்பு என்ற பெயரில் தொல்காப்பியம் தொடர்பான புதிய புத்தகத்தைவெளியிடச் செய்துள்ளார் ஜெயலலிதா.
கருணாநிதியின் தொல்காப்பியப் பூங்கா புத்தகத்துக்குப் போட்டியாக சில கட்டுரைகள் இந்த திருத்தியபதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்தை வெளியிட்ட ஜெயலலிதா, தமிழ் இலக்கிய உலகத்திற்கு காளிமுத்து ஆற்றி வரும்தொண்டு மிகப் பெரியது என்றார்.