100 அடி கிணற்றிலிருந்து 25 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீண்ட சிறுத்தை!
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுத்தை 25 மணி நேரப் போராட்டத்திற்குப்பிறகு உயிடன் மீட்கப்பட்டது.
கோமதிபுரம் ஆர்.கொம்பை கிராமத்தை ஒட்டிய மலைப் பகுதிகளில் இருந்து ஒரு சிறுத்தை கிராமத்துக்குள்நுழைந்தது. வீட்டில் கட்டிப் போடப்பட்டிருந்த பசு மாட்டை அந்த சிறுத்தை தாக்கியது.
இதையடுத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த சிறுத்தையை விரட்டினர். அப்போது பழனியம்மாள்என்பவருக்குச் சொந்தமான 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால்உயிருக்காக அது போராடிக் கொண்டிருந்தது.
தொடர்ந்து நீந்திக் கொண்டே உருமிய வண்ணம் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தது.இதையடுத்து கிணற்று நீர் மோட்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து வந்த கால்நடை டாக்டர்களும் வனத்துறையினரும்சிறுத்தையை மீட்கும் முயறசியில் இறங்கினர்.
அவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சிறுத்தை மீது செலுத்தினார்கள். இதைத் தொடர்ந்துசிறுத்தை மயக்கமடைந்தது. அதன் பிறகு சிலர் கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை மேலே கொண்டுவந்தனர்.
அதன் பிறகு அந்த சிறுத்தை பொள்ளாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அதுமீண்டும் காட்டுக்குள் கொண்டு போய் விடப்படும். சுமார் 25 மணி நேரம் கிணற்றில் தத்தளித்தபிறகு தான் சிறுத்தை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications