For Daily Alerts
Just In
தமிழ்நாட்டுல எல்லாமே சரியா நடக்குது: இல.கணேசன்
காரைக்குடி:
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பான விசாரணையில் பாரபட்சம் காட்டப்படுவதாகத் தெரியவில்லை என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் போலீஸார்விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் உள் நோக்கம் இருப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும்தெரியவில்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. சரியாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொண்டு வரப்பட்டதைப்போலவே, இந்திய அளவில் மதமாற்ற தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்பதே எங்களது கருத்து என்றார்.
-->