அழகிரி எழுதிய கடிதங்களை ஒப்படைக்க கருணாநிதிக்கு உத்தரவு
மதுரை:
தா.கிருட்டிணனுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கருணாநிதிக்கு அழகிரி அனுப்பிய கடிதங்கள், அதற்கு அவர்எழுதிய பதில் கடிதங்கள் ஆகியவற்றை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதிக்குசம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் படுகொலை தொடர்பாக அழகிரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 2 நாள் போலீஸ்விசாரணை நடந்தது. தற்போது அழகிரி வீட்டில் சோதனை நிடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தா.கிருட்டிணனுடன் இருந்த பூசல் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு அழகிரி பலமுறை கடிதம்எழுதியுள்ளார். அதற்கு கருணாநிதியும் பதில் அனுப்பியுள்ளார். இவற்றில் சில கடிதங்கள் போலீசாரிடம்சிக்கியுள்ளன.
ஆனால், அவற்றில் வழக்குக்கு சாதகமாக இருக்கும் கடிதங்களை மட்டும் நீதிமன்றம் போலீசார்சமர்பித்துள்ளதாகவும் தா.கி-அழகிரி இடையே பூசல் ஏதும் இல்லை என்பதை விளக்கும் கடிதத்தை போலீசார்மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய கருணாநிதி அந்தக் கடிதத்தை பத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.
இதையடுத்து கருணாநிதிக்கு அழகிரி அனுப்பிய கடிதங்களை மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கக் கோரிநீதிமன்றம் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தச் சம்மனை திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி பெற்றுக் கொண்டார். நீதிமன்றம் கோரியுள்ள கடிதங்கள்ஏற்கனவே மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக திமுக தரப்பில் பதில் அனுப்பட்டுள்ளது.
தற்போது அழகிரியின் வீட்டில் உள்ள கடிதங்களை கைப்பற்றுவதற்காக மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில்போலீசார் மனு செய்துள்ளனர். அதில் அழகிரி வீட்டில் சோதனை நடத்த அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.
தற்போது அழகிரி குடும்பத்தினர் மதுரையில் இல்லை, பாதுகாப்புக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ளகருணாநிதி வீட்டில் தங்கி உள்ளனர். வீட்டில் சோதனை நடத்த அனுமதி கிடைத்தவுடன் அழகிரி குடும்பத்தினர்மதுரை விரைவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications