எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார்: கருணாநிதி
சென்னை:
எப்போது தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க திமுக தயாராக உள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத்தயாராக உள்ளோம். அது எந்தத் தேர்தல் என்பதை சொல்ல விரும்பவில்லை. எந்தத் தேர்தலாக இருந்தாலும்,எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
கடந்த காலங்களில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வந்தது. திமுக ஆட்சியில் காவல்துறைக்கு நல்லமதிப்பிருந்தது. காவல்துறையின் கருத்துக்களை மதித்து செயல்பட்டோம். ஆனால் இப்போது அப்படி இல்லை.நல்லது, கெட்டது குறித்து காவல்துறையினர் கவலைப்படுவதில்லை.
ஆட்சியாளர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கிறார்கள். அவர்கள் விரும்புவதை செய்து கொடுக்கும் துறையாககாவல்துறை மாறி விட்டது. இது தமிழக வரலாற்றில் ஒரு கரும் புள்ளி.
உண்மைக்காக யார் போராடினாலும் அதை அடக்கி, ஒடுக்குவதிலையே இந்த அரசு குறியாக இருக்கிறது.எதற்கெடுத்தாலும், நிதிப் பற்றாக்குறை என்று கூறுவது நியாயமே இல்லை என்றார் கருணாநிதி.
சோ.பாவுக்குக் கண்டனம்:
இந் நிலையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பொடா சட்டம் தொடர்பாக நான் இரட்டை வேடம்போடுவதாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த கூட்டம்ஒன்றில் கூறியுள்ளார்.
அவரது கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும்அராஜக ஆட்சி குறித்து புகார் கூறுகிறார். இது இரட்டை வேடமாக அவருக்குத் தெயவில்லையா?
பொடா தொடர்பாக எதிர்வரும் கூட்டங்களில் திமுகவை சேர்ப்பதில்லை என்றும் அவர்கள் கூடிமுடிவெடுத்திருக்கிறார்கள். யாருடைய தயவும் திமுகவுக்குத் தேவையில்லை, திமுகவுக்கென்று தனித் தெம்பு உண்டு.
யாருடன் அணி சேர்வது, யார் நிரந்தரப் பிணி என்பதை திமுக உணர்ந்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.