For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கந்து வட்டிக்கு வெடி: வருகிறது கடுமையான சட்டம்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் ஏழைகளின் பணத்தையும், அவர்களது மானத்தையும் பறித்து வரும் கத்து வட்டிக் கும்பல்களைஒழிக்க கடும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கந்து வட்டிக் காரர்களை 3 ஆண்டு வரை சிறையில் தள்ளும்வகையில் இச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட மசோதாவுக்கு நேற்றிரவு ஆளுநர் ராம்மோகன் ராவ் அனுமதியளித்தார்.

தமிழகத்தின பல பகுதிகளிலும் அந்ததந்தப் பகுதியில் ஜாதிரீதியில் பலம் வாய்ந்த கும்பல்கள் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலை நடத்தி வருகின்றன. அரசியல்வாதிகளின் பினாமிகள், பண முதலைகள், காண்ட்ராக்டர்கள்,கள்ளச் சாராயம் மூலம் பணம் குவித்துள்ள கும்பல்கள், போலீஸ்காரர்களின் பினாமிகள் ஆகியோர் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலில் உள்ள முக்கியமான நபர்களாவர்.

ரூ. 100 கடன் வாங்கியவர்களை காலம் முழுவதும் தினமும் ரூ. 10 வட்டி கட்ட வைப்பது, ரன் வட்டி, அவர் வட்டி,மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என்று பல பெயர்களில் வட்டி வசூலிப்பது இந்தக் கந்துவட்டியின் ஸ்பெஷாலிட்டி. 360 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும்கும்பல்களும் உண்டாம்.

மேலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் வசூலிக்கப்படும் இந்த வட்டியால் வாழ்விழந்து,இவர்களிடம் மானத்தையும் இழந்து வரும் ஏழைகள் லட்சக்கணக்கில் உள்ளனர். வட்டி கட்ட முடியாதவர்களின்வீட்டுக்குள் குடித்துவிட்டு நுழைவது, வீட்டுப் பெண்களிடம் முறைகேடு செய்வது மதுரைப் பக்கம்சர்வசாதாரணமான நிகழ்வுகள்.

கந்து வட்டிக் கொடுமையால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், குடும்பத்தைஇழந்துள்ளனர், சொத்துக்களை பறிகொடுத்துள்ளனர்.

இப்போது இந்தக் கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளதுதமிழக அரசு.

கடன் கொடுப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனிகந்து வட்டிக்காரர்கள் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அவர்களுக்கு இந்த அதிகாரம்இல்லாமல் இருந்தது.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் உரையில் கந்து வட்டிக் கொடுமைக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என்று அரசு உறுதி கூறியிருந்தது.

தற்போதுள்ள சட்டப்படி வருவாய் துறையினரும், தாசில்தார்களும் மட்டுமே வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கைஎடுக்க முடியும், போலீஸாருக்கு அதிகாரம் இல்லை. புதிய சட்டத் திருத்தப்படி போலீஸாரும் நடவடிக்கை எடுக்கமுடியும்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X