வறட்சி காலத்தில் காவிரி நீர் பங்கீடுக்கு குழு அமைப்பு
டெல்லி:
வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடபாக திட்டம் தயாரிக்க புதிய குழுஉருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்று கடந்த 6ம் தேதியே கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. ஆனால், கூட்டத்துக்குத்தலைமை வகிக்க வேண்டிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோஸ்வாமி அன்றைய தினம்ஹிமாச்சலப் பிரதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக ஆஜாராக வேண்டியிருந்தது.
இதையடுத்து கூட்டம் 9ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.
காவிரி கண்காணிப்புக் குழுவின் 17வது கூட்டமான இதில் இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறைஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், பொதுப் பணித்துறைச் செயலாளர்குற்றாலிங்கம், தமிழக காவிரிக் குழுத் தலைவர் மோகனரங்கம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் வறட்சி காலத்தில் காவிரி நதி நீரை பகிர்ந்துகொள்வது குறித்து புதிய பார்முலா வை உருவாக்க வேண்டும் என தமிழகம் வலியுறுத்தியது.இதையடுத்து வறட்சி காலத்தில் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடபாக திட்டம் தயாரிக்கபுதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை ஆணையர் (திட்டப் பிரிவு) ஆர்.கே. சர்மா இதன் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.இதில் காவிரிப் படுகை மாநிலங்களைச் சேர்ந்த பாசனத்துறை தொழில்நுட்பவல்லுனர்கள் இடம் பெறுவர்.
இக் குழு இரண்டு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசி பார்முலாவை உருவாக்கி மத்தியநீர்வளத்துறையிடம் சமர்பிக்கும்.
இதன் பிறகு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணைய கூட்டம் நடைபெறும். அப்போதுஇந்தக் குழுவின் பரிந்துரையை வைத்து காவிரி நீரை தமிழகமும் கர்நாடகமும் பகிர்ந்து கொள்வதுகுறித்து பிரதமர் வாஜ்பாய் உத்தரவுகளைப் பிறப்பிப்பார்.












Click it and Unblock the Notifications