டி.ராஜேந்தர் பதவி பறிப்பு ஏன்? கருணாநிதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என் மீது மட்டுமே நம்பிக்கை இருப்பதாக டி.ராஜேந்தர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொண்டால், கட்சியின் மற்றநிர்வாகிகளை அவமதிப்பது போலாகி விடும். அதனால்தான், கட்சிப் பணியில் ஈடுபட டி.ராஜேந்தருக்கு விருப்பம்இல்லை என்று நினைத்து அவரிடமிருந்து கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவில் என்னைத் தவிர வேறு யார் மீதும் தனக்குநம்பிக்கை இல்லை என்று டி.ராஜேந்தர் அவராகவே அறிக்கை விட்டார்.

என்னைத் தவிர மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அவரே கூறி விட்ட பிறகு, கட்சி நடவடிக்கையில்ஈடுபட அவருக்கு விருப்பம் இல்லை என்று கருதினோம். இதனால்தான் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிபறிக்கப்பட்டது.

டி.ராஜேந்தரும், அவரது மகனும் இப்போது கலைத் துறையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களுக்கு எனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

ராஜேந்தர் சமீபகாலமாகவே திமுகவின் செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார். அதிமுகவுடன்அவர் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாகவும் திமுக சந்தேகப்படுகிறது.

இப்போது சூட்டிங் விஷயமாக டெல்லியில் உள்ள ராஜேந்தர் சென்னை திரும்பி பரபரப்பாக திமுகவில் இருந்துவிலகுவார் என்று தெரிகிறது. பதவி பறிக்கப்படுவது உறுதியானாதால் தான் திமுக பொதுக் குழுக் கூட்டத்தைராஜேந்தர் புறக்கணித்ததாகவும் தெரிகிறது.

இதே போல சரத்குமார் எம்.பியும் பொதுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அவரும் திமுகவில்மனஸ்தாபத்துடனேயே இருப்பதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+