Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஆரம்பம்: சென்னையில் வெப்பம் தணிகிறது

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தமிழகத்திலும் வெப்பம் குறையஆரம்பித்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து மதுரை, சிட்டம்பட்டி, நிலக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில்நேற்றிரவில் இருந்து மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டாவிலும் திடீர் மழை:

மேலும், திருச்சி, தஞ்சாவூரின் காவிரி டெல்டாப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளது. இதனால் காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை ஆரம்பித்ததையடுத்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட விவசாயிகள்பயிரிடும் வேலைகளையும் தொடங்கி விட்டனர்.

தென் மேற்கு பருவ மழை தாமதம் ஆனதால் நெல்லை, குமரி மாவட்டங்ளின் விவசாயிகள் தான் கடும்பாதிப்படைந்திருந்தனர். கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்தால்தான், நெல்லையிலும் மழை பெய்யும்.

இந் நிலையில் ஒரு வாரம் கால தாமதமான பருவ மழை நேற்று முதல் கேரளத்தில் மழை பெய்யத்தொடங்கியிருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கார் கால பயிர்களைப் பயிரிடஆரம்பித்துள்ளனர்.

இன்னும் சில தினங்களில் நெல்லையிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடும் கோடை காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள 3,000 ஏரிகள் காய்ந்து போய்க் கிடக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.

அப்பாடா, வெயில் குறைஞ்சு போச்சு!

இந்த மழை காரணமாக தமிழகத்திலும் வெப்பத்தின் அளவு குறைய ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் வெப்பம்கொஞ்சம் தணிந்துள்ளது. நேற்று 41.1 டிகிரியாக இருந்த வெப்பம் இன்று 38.7 டிகிரியாகக் குறைந்துவிட்டது.

கேரளத்தில் மழை வலுக்கும்போது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன்கூடிய மளைழ பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+