For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வெளி மாநிலத்தவர் நிலம் வாங்க தடை கோருகிறார் நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Nedumaranவெளி மாநிலத்தவர்கள், தமிழகத்தில் நிலம், சொத்துக்களை வாங்குவதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.காவல் நீட்டிப்புக்காக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட பழ.நெடுமாறன்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கர்நாடகத்தில் சமீபத்தில் இதுபோன்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற சட்டம் தமிழத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளாகி விடும் பரிதாப நிலைவிரைவிலேயே ஏற்படும்.

ஏற்கனவே, ஏராளமான நிலங்கள், சொத்துக்கள் பிற மாநிலத்தவர்களின் கைகளுக்குச் சென்று விட்டன. இனியும்தாமதித்தால், தமிழகமே அடிமையாகி விடும், தமிழனும் அடிமை வாழ்வு வாழ்வான்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இடைக்கால அரசு தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேயின் அறிவிப்புதெளிவாக இல்லை.

விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இல்லாமல், இலங்கையில் அமைதியான அரசை அமைக்கவே முடியாது. இதேகருத்தைத்தான் டோக்கியோவில் நடந்த நன்கொடையாளர் மாநாடும் இலங்கை அரசிடம் எடுத்துக் கூறியுள்ளதுஎன்றார் பழ.நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X