போலீஸ்- பஸ் டிரைவர் அஜாக்கிரதைக்கு பலியான 2 மாணவிகள்

Subscribe to Oneindia Tamil

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலையம்பட்டி என்ற ஊரில் கோவில் தேர்த்திருவிழாவின்போது போக்குவரத்து திருப்பி விடப்பட்டதில், ஏற்பட்ட குழப்பத்தில், அரசு பஸ் மோதி 2மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலையம்பட்டி கிராமத்தில் வேணுகோபாலசுவாமி கோவில் தேர்த் திருவிழா நடந்தது. இந்த நேரத்தில்சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்களை போலீசார் அகற்றினர்.

இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேர் நடுரோட்டில்நிறுத்தப்பட்டது. இதனால் மதுரை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது. ஊரின் குறுகலாக சந்து, பொந்துகளில்இந்த வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. ஆனால் போக்குவரத்து போலீஸார் போதிய அளவில் பணியில்ஈடுபடுத்தப்படவில்லை.

இதனால் வாகனங்கள் தங்களது இஷ்டத்திற்கு ஊரின் குறுகலான சாலைகளில் தாறுமாறச் சென்றன. இதில் மிகவேகமாக அரசு பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவர் ஆசியர் பயற்சிக் கல்லூரி மாணவிகள் மீது மோதினான்.

இதில் 2 மாணவிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸாரின் அஜாக்கிரதை மற்றும் அரசு பஸ் டிரைவரின் காட்டுமிராண்டித்தனமான டிரைவிங் காரணமாகவேஇரண்டு அப்பாவி உயிர்கள் பலியானதாக பொதுமக்கள் குமுறலுடன் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+