For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனத்துறை வர மறுத்தது: சேற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்ட கிராமத்தினர்

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மலை கிராமத்தில், சேற்றில் சிக்கிக் கொண்ட குட்டியானையை கிராம மக்களே மீட்டு காட்டுக்குள் அனுப்பினர்.

கூடலூர் அருகே உள்ளது சோலாரி கிராமம். அந்தக் கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு யானைகள்வருவது வழக்கம். அதுபோலவே நேற்றும் அங்கு ஒரு காட்டு யானைக் கூட்டம் புகுந்தது.

தேயிலைத் தோட்டங்களுக்குள் புகுந்த அந்த யானைகள் பயிர்களை நாசம் செய்தன. இந் நிலையில்ஒரு குட்டியானை கிராமத்திற்குள் நுழைந்தது. அதை காட்டுக்குள் விரட்ட கிராமத்தினர் முயன்றபோதுசேற்றுக்குள் சிக்கிக் கொண்டது.

சேற்றிலிருந்து வெளியே வர அதனால் முடியவில்லை. இதைப் பார்த்து பரிதாபப்பட்ட கிராமத்தினர்,வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் வனத்துறையினர் யாரும் வரவில்லை.

இதையடுத்து கிராம மக்களே களம் இறங்கி யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குட்டி யானை சேற்றிலிருந்து மீட்கப்பட்டது. பின்னர் யானைக்குஆகாரமும் கொடுத்த கிராம மக்கள் பின்னர் அதை காட்டுக்குள் விரட்டி விட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X