Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல் .. இலங்கை மீனவர்கள அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை அடித்து, கடத்திச் சென்றுள்ளனர் இலங்கை மீனவர்கள்.

அவர்களிடமிருந்து 2 மீனவர்கள் தப்பி வந்து விட்டனர். கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை வழக்கம் போல மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.இந்தியக் கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை மீனவர்கள் அங்கு வந்துராமேஸ்வரம் மீனவர்களை தாக்கினர்.

திடீர் தாக்குதலில் நிலை குலைந்த தமிழக மீனவர்கள் அவர்களிடமிருந்து தப்ப முயன்றனர். ஆனால் இலங்கைமீனவர்களின் பயங்கரத் தாக்குதலில் ராஜு, டெனில், சுந்தரராஜன், ஜனகன் ஆகிய தமிழக மீனவர்கள்படுகாயமடைந்தனர்.

இவர்களில் டெனில் மற்றும் சுந்தரராஜன் இருவரும் ஒரு படகில் தப்பிவந்து விட்டனர். மற்ற 18 பேரும் மாட்டிக்கொண்டனர். அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளதாக டெனிலும், சுந்தரராஜனும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடற்படை அதிகாரிகள், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு தமிழக போலீசார் தகவல்கொடுத்துள்ளனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+