கருணாநிதியின் நில விவகாரம்: மாநகராட்சியில் முக்கிய பைல் மாயம்
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மாநகராட்சி நிலத்தை வழங்கியது தொடர்பான கோப்பு மாநகராட்சிஅலுவலகத்தில் இருந்து மாயமாகியுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் பின் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலம்ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தீர்மானம்கொண்டு வந்தார்.
இந்த நிலத்தை மாவட்ட கலெக்டர் மீட்டுத் தரவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், கடந்த 1967ம் ஆண்டு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே இந்த நிலம்கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று 1968ம் ஆண்டில் தமிழக அரசு ஒரு ஆணையும்பிறப்பித்தது.
இதன் பிறகு வந்த எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சியில் அந்த அரசு ஆணை ரத்து செய்யப்பட்டது. மாநகராட்சிநிலத்தை கருணாநிதி மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்துகருணாநிதி நீதிமன்றம் செல்ல முடிவு செய்யவே, அதன் பின் எம்.ஜி.ஆர். இந்த விவகாரத்தை கிடப்பில்போட்டுவிட்டார்.
ஆனால், தற்போது அந்த நில விவகாரத்தை அதிமுக மீண்டும் கிளப்பியுள்ளது. முதல் கட்டமாக மாநகராட்சியில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வைத்து நிலததைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறுமாவட்ட நிர்வாகத்துக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு நிலம் ஒதுக்கியது தொடர்பாக 1967-68ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சியின்தீர்மானங்கள், அரசாணை போன்றவை அடங்கிய பைல் காப்பியைத் தருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் திமுககவுன்சிலர்க கேட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் பைலைத் தேடியபோது தான் அது காணாமல் போனது தெரியவந்தது. இதனால்அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். திட்டமிட்டே இந்தப் பைலை காணாமல் போகச் செய்துள்ளனர் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications