பெங்களூரில் வெளி மாநிலத்தவர் குடியேறுவதை தடுக்க கோருகிறார் வாட்டாள்
பெங்களூர்:
பெங்களூரில் வெளி மாநிலத்தினர் குடியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்குகன்னட சாளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக அரசியல் நடத்தி வருபவர் வாட்டாள்.
பெங்களூரில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
கர்நாடகத்தில், குறிப்பாக பெங்களூரில் வெளி மாநிலத்தினரின் குடியேற்றம் மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால்கன்னடர்களின் வேலை வாய்ப்புகள் பறி போகின்றன. நிலைமை கையை மீறிப் போய்க் கொண்டுள்ளது.
கன்னடர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் முற்றி வருகின்றன.
வெளிமாநிலத்தவர்களால் உள் மாநில மக்கள் வாய்ப்பை இழப்பது இந்தியாவில் வேறெங்குமே நடக்காத ஒருவிஷயம்.
எனவே மற்ற மாநிலத்தினர் உள்ளே வருவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியகட்சிகளால் கர்நாடகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுடன் சேர்ந்து உள்ளூர்கட்சிகளின் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.
வாட்டாளைப் போன்றே மும்பையிலும் வெளியார் குடியேறுவதைத் தடுக்க வேண்டும் என்று சமீபத்தில் கருத்துத்தெரிவித்திருந்தார் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே.












Click it and Unblock the Notifications