கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்திற்குத் தீ வைப்பு: குழித்துறையில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
குழித்துறை:
கன்னியாகும மாவட்டம் குழித்துறை அருகே கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்திற்கு தீவைக்கப்பட்டதால்அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
குழித்துறை அருகே உள்ளது இளம்பிறை தோட்டம். இங்கு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடம் உள்ளது. பிளாஸ்டிக்கூரையால் இந்தக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை நிலவிவருகிறது.
இந்த இடம் தங்களுக்குத் தான் சொந்தமானது என்று இப் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென்று பிரார்த்தனைக் கூடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதில் மேல் கூரை ழுவதும்எரிந்து சாம்பலானது. இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக அங்குவிரைந்தனர்.
அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடத்திற்கு தீ வைத்தது யார் என்று விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications