கோவையில் மீண்டும் தொடர் குண்டுவெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி
கோவை:
கோவை நகரில் கடந்த1998ம்ஆண்டில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பைப் போல மீண்டும் தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசுக்கு மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரில் பீதி நிலவுகிறது.
கோவை நகரில் கடந்த 1998ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதையடுத்து மதக் கலவரமும்மூண்டது. அதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
இந் நிலையில் மீண்டும் ஒரு தொடர் வெடிகுண்டுத் தாக்குதலை நத்த தீவிரவாதகிள் திட்டமிட்டுள்ளதாக மத்தியஉளவுப் பிரிவான ஐ.பிக்கு தகவல் கிடைத்தது. அதே போல மாநில உளவுப் பிரிவு போலீசாருக்கும் இந்தத் தகவல்எட்டியுள்ளது.
இந்தச் சதித் திட்டம் கேரளாவில் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் சில அமைப்புகள்தான் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், கோவையைச் சேர்ந்த மலையாள இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு இந்தஅமைப்புகள் தீவிரவாத பயிற்சி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.
குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர்கள்பயிற்சியை முடித்து ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் தமிழகத்துக்குள் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் ஐ.பி.கூறியுள்ளது.
இந்த குண்டுகள் திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்தெரியவருகிறது.
ஒரே சமயத்தில் கோவை நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்துவதும், கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள அரசியல் கட்சித் தலைவர் அப்துல் மதானியை மீட்பதுமேஇவர்களது திட்டத்தின் முக்கிய அம்சம் என்றும் மாநில அரசை ஐ.பி. எச்சரித்துள்ளது.
இதையடுத்து கோவை நகர் முழுவதிலும் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். நகருக்குள்நுழையும் சாலைகளில் பல செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்குஉட்படுத்தப்படுகின்றன.
நகரில் சந்தேகத்துக்கிடமானசில இடங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர்,மேட்டுப்பாளையத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications