கருணாநிதி வீட்டு விவகாரம்: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அமளி
சென்னை:
சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள கருணாநிதி வீட்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான 700 சதுர அடி நிலம்ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று திமுகவினருக்கும்அதிமுகவினருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
இதனால் மன்றக் கூட்டத்தில் அமளி, துமளி நிலவியது.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில், 700 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீண்டும் மாநகராட்சியே எடுத்துக் கொள்வதற்குவகை செய்யும் தீர்மானம் கடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இந்த நிலத்தை உரிய முறையில் தான் மாநகராட்சியிடம் இருந்து பெற்றதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் கருணாநிதியின் நிலையை விளக்கும் மாநகராட்சியின் பைல்கள் திடீரென காணாமல் போய்விட்டன.
இந் நிலையில், இன்று மாநகராட்சிக் கூட்டம் நடந்தது. அப்போது நிலத்தைத் திரும்பப் பெறும் தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு எதிராக தாறுமாறாகக் கருத்துத்தெவித்தனர். இதையடுத்து திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்மன்றத்தில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்துவிட்டு மன்றக்கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இதன் பின்னர் மீண்டும் மன்றத்துக்கு திமுகவினர் வந்தனர். அப்போது வீராணம் திட்டத்தில் கருணாநிதி ஊழல்செய்ததாக அதிமுக கவுன்சிலர்களும் துணை மேயர் தியாகராஜனும் புகார் கூறவே, மீண்டும் இரு தரப்பினருக்கும்கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திமுகவினரை வெளியேற்ற தியாகராஜன் உத்தரவிட்டார். இத்ை தொடர்ந்து காவலர்கள் 55 திமுககவுன்சிலர்களையும் குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications