டாக்டருடன் எக்கு தப்பாய் மாட்டிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கரூர்:
திருச்சி அரசு மருத்துவனை டாக்டருடன் தவறான உறவு வைத்திருந்த அரவக்குறிச்சி பெண் போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர்கார்த்திகேயாயினி (வயது 28). சமீபத்தில் தான் இவர் இங்கு மாற்றலாகி வந்தார். பணி தொடர்பாக திருச்சி அரசுமருத்துவமனைக்குச் சென்றபோது அங்கு பணியாற்றும் கார்த்திகேயன் என்ற டாக்டருடன் இவருக்குத் தொடர்புஏற்பட்டுள்ளது.
கார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர். அரவக்குறிச்சியில் உள்ள கார்த்திகேயாயினின் வீட்டுக்கு அவர்கார்த்திகேயன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் முகம் சுளித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கார்த்திகேயாயினியும் கார்த்திகேயனும் வீட்டுக்குள் எக்கு தப்பாக இருந்தபோது அருகாமைவீட்டினர் வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து போலீசார் சென்று இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கார்த்திகேயாயினியை தற்காலிக இடை நீக்கம்செய்து திருச்சி மாநகர கமிஷனர் சுனில் குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கார்த்திகேயாயினி மீது சில காவல்துறை உயர் தலைகளுக்கு ஒரு கண் இருந்ததாகவும், தங்களுக்கு சிக்காததுடாக்டருக்கு கிடைத்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் அவர்கள் தான் சிலரின் உதவியடன் இருவரையும் சிக்கவைத்ததாகவும் அப் பகுதியின் லோக்கல் நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
-->











Click it and Unblock the Notifications