கருணாநிதிக்கு அழகிரி எழுதிய கடிதங்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

திமுக உட் கட்சித் தேர்தல், மோதல் தொடர்பாகவும், தா.கிருட்டிணன் தொடர்பாகவும் திமுக தலைவர்கருணாநிதிக்கு, அழகிரி எழுதிய 3 கடிதங்கள் மதுரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தா.கிருட்டிணன் கொலை தொடர்பான ஆதாரங்களை மதுரை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இதில் அழகிரி வீட்டில் கருணாநிதிக்கு அவர் எழுதிய 3 கடிதங்களின் நகல்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.ஆனால், அதில் ஒரு கடிதத்தில் தா.கிக்கும் தனக்கும் மோதல் ஏதும் இல்லை என்று அழகிரி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்தக் கடிதத்தை மட்டும் மறைத்துவிட்ட போலீசார் மற்ற இரண்டு கடிதங்களை பத்திரிக்கைகளுக்குத்தந்தனர். இதையடுத்து இன்னொரு கடிதத்தை கருணாநிதியே வெளியிட்டார்.

இதையடுத்து கருணாநிதி வசம் இருந்த 3 கடிதங்களையும் கேட்டுப் பெற்ற போலீசார் அவற்றை மதுரை 6-வதுகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனிதாவிடம் நேற்று ஒப்படைத்தனர்.

மேலும் ஒருவர் சரண்:

இதற்கிடையே தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்து மதுயைைச் சேர்ந்த பாண்டி என்றஊழப்பாண்டி இன்று மதுரை 6வது நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 30ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அழகிரியுடன் தயாளு-பாலு சந்திப்பு:

இந் நிலையில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியை அவரது தாயார் தயாளு அம்மாளும், மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலுவும் சந்தித்துப் பேசினர்.

விலகுகிறார் ராமையா:

இதற்கிடையே தா.கிருட்டிணனின் தம்பி ராமையா திமுகவில் இருந்து விலகிவிடத் திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது. விரைவில் அவர் இதனை அறிவிக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+