For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்வாகம்: ரணில் அறிவிப்பை நிராகரித்தனர் புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

வட-கிழக்குப் பகுதியில் இடைக் கால நிர்வாகத்தை அமைப்பது குறித்து பேச்சு நடத்தத் தயார் என்ற பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயின் வெற்று அறிவிப்பை வைத்துக் கொண்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப முடியாது எனவிடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இந்த இடைக்கால நிர்வாகம் அமைப்பதற்கான செயல் திட்டத்தை அறிவித்து, உண்மையான முயற்சிகளையும் அரசுஎடுத்தால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று புலிகள் கூறியுள்ளனர்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர வசதியாக, புலிகளின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிர்வாகத்தைஅமைக்கத் தயார் என்றும், அது குறித்துப் பேசலாம் என்றும் ரணில் விக்கிரமசிங்கே நேற்று அறிவித்திருந்தார்.மேலும் இது குறித்து புலிகளுடன் நார்வே தூதர்கள் பேசி வருவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இப்போது சிக்கலில் உள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டிய பொறுப்பு புலிகளுக்குத்தான் உண்டு. தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு புலிகள் திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்என்று தெரிவித்திருந்தார் ரணில்.

இதற்குத் தான் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இன்று விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நெட்.காம் இணையத் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

இடைக்கால கவுன்சில் எப்படி இருக்கும், அதன் கட்டமைப்பு என்ன ஆகியவை குறித்து பிரதமர் ரணில் விளக்கம்ஏதும் தரவில்லை. எங்களைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் நடத்தும் விதத்தையே முழுமையாக மாற்றியாகவேண்டும் என்று கோருகிறோம்.

தமிழர்களுக்கு மறுவாழ்வு தரும் திடமான செயல் திட்டத்தின் அடிப்படையில் தான் பேச்சுவார்த்தைகள்இருக்கலாம். திட்டமே இல்லாமல், எதையும் அமலாக்காமல் பேச்சு மட்டுமே நடத்திக் கொண்டிருக்க முடியாது.இதை நார்வே அமைதித் தூதர்களிடமும் தெரிவித்துள்ளோம்.

இடைக்கால நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் எதையும் வலியுறுத்த முடியாது. நிர்வாகத்தின்அதிகாரம் என்ன, அதன் கட்டமைப்பு என்ன போன்றவற்றை அரசு தான் தெரிவிக்க வேண்டும். எந்த அளவுக்குஅரசியல், நிதி, நிர்வாக அதிகாரங்களை இடைக்காலக் கவுன்சிலுக்குத் தர அரசு தயாராக உள்ளது என்பதையும்விவரிக்க வேண்டும்.

அதிகாரத்தை பங்கிட மறுக்கும் அரசியல் சட்டம், தமிழர்களின் உரிமைகளுக்கு எதிரான ஜனாதிபதி (அதிபர்சந்திரிகா) ஆகியவற்றின் கீழ் செயல்படும் ரணிலின் அரசு, இடைக்கால நிர்வாகம் குறித்து எந்த உத்தரவாதமும் தரத்தயாராக இல்லை.

இந் நிலையில் புலிகள் தான் இதற்குத் தீர்வு சொல்ல வேண்டும் என்று சொல்வது நியாயமற்றது. இடைக்காலநிர்வாகம் இப்படித்தான் இருக்க வேண்டும், இதெல்லாம் வேண்டும் என்று எதையும் நிர்பந்திக்க நாங்கள் தயாராகஇல்லை.

உங்களால் எவ்வளவு அதிகாரத்தைத் தர முடியும், எந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறீர்கள்என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம். ஆகவே, அரசு தான் இந்த விஷயத்தில் மேலும் விளக்கங்கள் தரவேண்டும். இடைக்கால நிர்வாகம் அமைப்பதில் எந்த அளவுக்கு அரசு தீவிரமாக இருக்கிறது என்பதை செயலில்காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் பாலசிங்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X