For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்ம சாவு

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டவர் மர்மமானமுறையில் இறந்தார். இதையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

ஓரத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கணேசன். இவரது மனைவி தேவி. இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது தேவியை, கணேசன் அடித்து விட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து தேவி போலீஸ் நிலையத்தில் புகார்கொடுத்தார்.

புகாரின் பேரில் கணேசனை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால்,காவல் நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்ட அரை மணி நேரத்திலேயே கணேசன் இறந்து விட்டதாக போலீசார்தெரிவித்தனர்.

இதையடுத்து கணேசனின் உறவினர்களும் ஊர் மக்களும் காவல் நிலையத்தில் கூடினர்.

போலீஸார் தான் கணேசனை அடித்துக் கொன்று விட்டதாக அவர்கள் புகார் கூறினர். இதைத் தொடர்ந்து அங்குபதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீஸ் உயரதிகாரிகள் அங்கு விரைந்து வந்து கணேசனின் உறவினர்களைசமாதானப்படுத்தினர்.

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தபோது, கணேசனுக்கு வலிப்பு வந்ததாகவும், இதனால் தான் அவர்இறந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

ஆனால், கணேசனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாகக் கூறியுள்ள அவரது உறவினர்க, சாவுக்குக்காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படாதவரை உடலை வாங்கப் போவதில்லை என்றுஅறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X