பள்ளி மாணவன் தற்கொலை: கைதான ஆசிரியர் ஜாமீன் கோருகிறார்
சென்னை:
சென்னை முகப்பேர், வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி மாணவர் ராம் அபினவ் தற்கொலை செய்து கொண்டதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கணிதப் பாட ஆசிரியர் கண்ணப்பன் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.
சென்னை மேற்கு முகப்பேல் உள்ள வேலம்மாள் மேல் நிலைப்பள்ளியில் பத்தாவது படித்து வந்தவர் ராம் அபினவ்.பிறந்தநாளன்று பள்ளிக்குப் போகாத காரணத்தால் அவனை கணித ஆசிரியர் கண்ணப்பன் கண்டித்தார். அடித்தும்,உதைத்தும் தண்டித்தார்.
இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இதைடுத்து ஆசிரியர் கண்ணப்பன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கண்ணப்பன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், என் மீது எந்தத் தவறும் இல்லை, நான் ஒரு குற்றம் செய்யவில்லை. முதலில் என் பெயர்போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. பிறகுதான் சேர்த்துள்ளனர்.
எனவே உள்நோக்கததுடன் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.