For Quick Alerts
For Daily Alerts
Just In
முன்னாள் ராணுவ வீரரின் குடிபோதை செயல்: 20 வீடுகள் தீயில் சாம்பல்
திருச்சி:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் வீரன் பொறுப்பற்ற செயலால் 20 வீடுகள் தீயில் கருகிசாம்பலாயின.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் நாகராஜ். இவர் குடிக்கும் பழக்கம் கொண்டவர். குடிபோதையில் தனதுவீட்டுக்கு நாகராஜ் தீ வைத்துள்ளார். இந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. இதில் 20 வீடுகளும் தீயில்கருகின.
தீயணைப்புப் படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பல வீடுகளிலில் இருந்த டிவிக்கள்,பிரிட்ஜ்கள் உள்ளிட்ட பொருள்களும் உடைகளும் தீயில் கருகின.
இச் சம்பவத்தையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
-->