அதிமுக எம்.பியின் உதவியாளர் மீது போலீஸ் தாக்குதல்: கமிஷ்னர் விசாரணை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான முக்கிய வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞரும், அதிமுக எம்.பியுமானஜோதியின் உதவியாளர் போலீசாரால் தாக்கப்பட்டார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகரபோலீஸ் கமிஷ்னர் விஜய்குமாரே நேரில் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ள ஜோதி, ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலாவிடமும் செல்வாக்கு பெற்றவர்.இவர்களது வழக்குகளை கவனித்து வருபவர்.
இவரது உதவியாளர் சண்முகசுந்தரம். அண்ணாநகரில் உள்ள ஜோதியின் வீட்டுக்கு ஜோதியும் சண்முகசுந்தரமும்நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் இரவுச் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோலீஸ்காரரான ரங்கராஜன் இந்தக் காரை நிறுத்தினார்.
அப்போது ஜோதி, தான் ஒரு எம்.பி என்பதைச் சொன்னார். இதையடுத்து அந்தக் காரை போலீஸ்காரர்விட்டுவிட்டார்.
ஜோதியை வீட்டில் விட்டுவிட்டு சண்முகசுந்தரம் திரும்பி வந்தார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோலீஸ்காரரிடம் போய், எங்க காரை எதுக்கு நிறுத்துனே என்று கேட்டுள்ளார். வழக்கமான சோதனைக்குத் தான்நிறுத்தினேன். அப்புறம் தான் விட்டுவிட்டேனே என்று போலீஸ்காரர் கூறியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போதுசண்முகசுந்தரத்தை போலீஸ்காரர் ரங்கராஜன் சரமாரியாக அடித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து இரவோடு இரவாக திருமங்கலம் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் துணை கமிஷ்னர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் ரங்கராஜன்ஆகியோர் போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் நேரில் அழைத்து இன்று விசாரணை நடத்தினார். போலீஸ்காரர் மீதுநடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications