நக்கீரன் கோபாலின் மாமனார் தற்கொலை: போலீஸ் தொல்லை எதிரொலி?

Subscribe to Oneindia Tamil

விருத்தாச்சலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், நக்கீரன் கோபாலின் மாமனார் பாண்டியன் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். விசாரணை என்ற பெயரில் போலீசார் அவருக்கு பெரும் தொல்லை கொடுத்ததால் தான் அவர்தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பொடா சட்டத்தின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பு உள்ள அனைவரிடமும்விசாரணை நடந்து வருகிறது.

கோபாலின் மாமனார் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் விருத்தாச்சலத்தில் வசித்து வந்தார். இவர்விருதாச்சலம் பகுதி கிளைக் கழக அதிமுக செயலாளராகவும் இருந்து வந்தார்.

அதிமுகவில் இருந்தபோதும் கூட பாண்டியனிடம் அடிக்கடி போலீஸார் வந்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணைக்காக பலமுறை அவர் போலீஸாரால் வெளியிலும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போதெல்லாம்அவர் துன்புறுத்தப்பட்டாதத் தெரிகிறது.

இதேபோல, நேற்று முன்தினமும் பாண்டியனிடம் விசாரணை நடந்ததாகத் தெகிறது. இதனால் மனமுடைந்தபாண்டியன் நேற்றிரவு தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மாமனாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நாளை நிக்கீரன் கோபால் விருத்தாச்சலம் செல்ல, சென்னைபூந்தமல்லி பொடா நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரன் அனுமதி அளித்துள்ளார்.

காவல் நீட்டிப்புக்காக இன்று பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு கோபால் கொண்டு வரப்பட்டபோது இந்த அனுமதியைநீதிபதி வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+