அயோத்தி: என் கடமை முடிந்துவிட்டது- சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியார் முன் வைத்த திட்டத்தை அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்டவாரியம் நிராகரித்துவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தனது கடமை முடிந்துவிட்டதாக சங்கராச்சாரியார்தெரிவித்துள்ளார்.
சங்கராச்சாரியார் முன் வைத்த திட்டத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் இல்லை, மேலும் இந்தசமரசத் திட்டமே வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகள் உருவாக்கியதைப் போல உள்ளதாக இஸ்லாமியசட்டவாரியம் அறிவித்துள்ளது. கோவிலைப் பற்றி மட்டும் பேசி, மசூதியைப் பற்றி பேசாமலேயே விட்டால் இதுஎப்படி சமரசத் திட்டமாகும் என்றும் சட்ட வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
நேற்று லக்னோவில் கூடிய இந்த வாரியத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சங்கராச்சாரியாரின் திட்டத்தைஒட்டுமொத்தமாக நிராகரித்தது.
இந் நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், அயோத்தி விவகாரத்தில் என்கடமை முடிந்துவிட்டது. என்னுடன் பேச்சு நடத்த இஸ்லாமிய அமைப்புகள் முன் வந்தால் நான் பேசத் தயாராகவேஉள்ளேன். என் கதவுகள் அவர்களுக்காக திறந்தே இருக்கும்.
அயோத்தி விஷயத்தை முஸ்லீம்கள் தங்களது கெளரவம் தொடர்பான விவகாரமாகக் கருதக் கூடாது. இந்தவிவகாரத்தில் நான் தலையிட்டதே மத அமைதி நிலவவும், ஏழைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தான்.இதனால் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு முஸ்லீம்கள் தானமாகத் தர வேண்டும்.
அதே நேரத்தில் காசி, மதுரா கோவில்கள் விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன். அயோத்தியில் பாபர் மசூதிஇடிக்கப்பட்டது தவறு. அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இப்போதுஅதை நீக்குவது சரியல்ல. இதனால் சமூகப் பதற்றம் தான் ஏற்படும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களால் தீர்ப்பு ஏற்படாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார்.
நேற்று சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய சங்கராச்சாரியார், நான் அனுப்பிய திட்டத்தில் குழப்பமோஅல்லது தெளிவின்மையோ இருந்திருந்தால் அது தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். அதற்குப்பிறகு திட்டத்தை நிராகத்திருக்கலாம்.
எனது திட்டம் நிராகக்கப்பட்டதால் நான் வருத்தப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவார்கள்.பிரச்சனையைத் தீர்ப்பது தொடர்பாக எனது முயற்சிகள் தொடரும் என்று கூறியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications