முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்று பல நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் மரியாதை நிமித்தமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதல்வரை சந்திக்காமல் இருப்பது, மாநகராட்சி நிர்வாகம்-மாநில அரசு நிர்வாகத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்து துணை மேயர் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கும் துணை மேயரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.மகேஷ்குமார், தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.

Chennai Mayor

என்ன பஞ்சாயத்து?

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என அனைத்து பொறுப்பிலும் திமுகவினர் இருக்கினற்னர். மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 200 வார்டுகளில் 153 வார்டுகளில் திமுகதான் வெற்றி பெற்றிருந்தது.

எனவே இன்று வரை முதலமைச்சர் விஜய் மேயர், துணை மேயர் என யாரும் சென்று சந்திக்கவில்லை. நிர்வாக ரீதியில் பார்த்தால் நகராட்சி நிர்வாகத்துறை முதல்வர் வசம்தான் இருக்கிறது. ஆனால் நிர்வாக பொறுப்பில் இருக்கும் மேயர் உள்ளிட்டோர் விஜய்யை சந்திக்கவில்லை. இதனால், மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாநில அரசு நிர்வாகத்திற்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

துணை மேயர் சொல்வது என்ன?

இப்படி இருக்கையில்தான் இந்த விவகாரம் குறித்த துணை மேயர் பேட்டியளித்திருக்கிறார். அதில் ஏன் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

"முதல்வரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கும், அதன்பின்னர் இரண்டு முறை நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளுக்கும் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. அவசரம் காரணமாக அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் அதே நிலை தொடர்ந்தது," என்றார் அவர்.

முதல்வரை சந்திப்பது பற்றி

மேலும், "அரசுத் தரப்பிலேயே மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிப்பது போல் செயல்பட்டு வரும் நிலையில், முதல்வருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்புவது நியாயமானதல்ல," என்று மு. மகேஷ்குமார் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டது சுட்டிக்காட்டப்பட்டபோது, "அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய மேயரான மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதால்தான் அவர் பங்கேற்றார்," என்று மகேஷ்குமார் தெளிவுபடுத்தினார்.

மரபு சார்ந்ததுதான்

நகராட்சி நிர்வாகத் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், துறையின் தலைவராக அவரை சந்தித்திருக்கலாமே என்ற கேள்விக்கு, "முதல்வரை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திக்க சட்ட விதிமுறை ஏதுமில்லை. சந்திப்பது மரபு சார்ந்ததுதான்," என்று அவர் பதிலளித்தார்.

மேலும், "பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை அரசே புறக்கணிக்கும் சூழலில், நாங்களாக வலியச் சென்று சந்திப்பது என்பது சாத்தியமற்றது," என்று மு. மகேஷ்குமார் கூறினார். மாநில அரசுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் இடையே இத்தகைய முரண்பாடு, மக்கள் நலத்திட்டங்களைப் பாதிக்காதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

முழு ஒத்துழைப்பு

அதற்கு, "அரசின் திட்டங்களை சென்னை மாநகராட்சியில் நிறைவேற்ற தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம். நிர்வாகச் செயல்பாடுகளை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக ஒருபோதும் தடையாக இருக்காது," என்று மகேஷ்குமார் உறுதிபடத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+