அயோத்தி விவகாரம்: வி.எச்.பி. ரகசிய ஆலோசனை
லக்னெள:
அயோத்தி விவகாரத்தில் சங்கராச்சாரியாரின் திட்டத்தை இஸ்லாமிய சட்ட வாரியம் நிராகரித்ததையடுத்து விஸ்வஹிந்து பரிஷத் தலைவர்கள் இன்று அவரச ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அந்த அமைப்பின் சர்வதேசத்தலைவர் அசோக் சிங்கால் அயோத்திக்குப் புறப்பட்டார்.
நேற்று கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இன்றுலக்னெள வந்தார். மாரைடப்பால் பாதிக்கப்பட்டு லக்னெள மருத்துவமயிைல் அனுமதிக்கப்பட்டுள்ள ராமஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் ராமஹம்ஸ் பரமஹம்ஸை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அங்கு மூத்த வி.எச்.பி. தலைவர்கள் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அங்கு என்ன பேசப்பட்டதுஎன்ற விவரத்தை சிங்கால் விளக்க மறுத்துவிட்டார்.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் விட்டுத் தரவே கூடாது என்று பரமஹம்ஸ் தன்னிடம் கூறியதாக மட்டும்தெரிவித்த சிங்கால் உடனே அங்கிருந்து அயோத்தி புறப்பட்டுச் சென்றார். அங்கு சாதுக்களுடன் ராமர் கோவில்கட்டுவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
முன்னதாக கன்னியாகுமரியில் நிருபர்களிடம் பேசிய சிங்கால், எங்களைத் தனிமைப்பபடுத்தி விட பா.ஜ.க.முயல்கிறது. அதற்கான மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறாது.அயோத்தியில் புதிதாக மசூதி கட்டத் தேவையில்லை என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியிருப்பதை நானும்வரவேற்கிறேன்.
அங்கு ஏற்கனவே 23 மசூதிகள் உள்ளன. அவற்றில் சில பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. எனவே புதிதாகஒன்றைக் கட்டத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications