For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் சலித்து விட்டதாம்: கூறுகிறார் புதுவை கண்ணன்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

அரசியல் சலித்து விட்டது. பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்று பாண்டிச்சேகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.கண்ணன் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரி அரசியலில் தவிர்க்க முடியாத புள்ளி கண்ணன். தீவிர காங்கிரஸ்காரரான இவர் மூப்பனான்வலதுகரமாக திகழ்ந்தவர். மூப்பனார் காங்கிரஸை விட்டுப் பிரிந்தபோது இவரும் பிரிந்து வந்து பாண்டிச்சேரியில்தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார்.

ஆனால் பின்னர் மூப்பனாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ்என்ற புதுக் கட்சியைத் தொடங்கினார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். ஆனால் பெரும் வெற்றி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். இருப்பினும் மற்ற தலைவர்களுக்கும் இவருக்கும் ஒத்துவரவில்லை.தொடர்ந்து உரசல்கள் இருந்து வந்தன.

இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி மீது பகிரங்கமாக புகார் தெவித்தார். சமூக விரோதிகளுடன்அவருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறி பரபரப்பூட்டினார்.

இந் நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கண்ணன் பேசுகையில், அரசியல் சலித்துவிட்டது. அரசியல்வாதிகள் யாரும் உண்மை பேசுவதில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துயாரும் அரசியலுக்கு வருவதில்லை.

எதிர்வரும் தேர்தல்களில் நான் போட்டியிடப் போவதில்லை. மேலும் மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லைஎன்றார்.

பல கட்சிகளைக் கண்டவராக இருந்தாலும் முதல்வர் பதவியைப் பிடிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்கண்ணனுக்கு எப்போதும் உண்டு. இப்போது அவர் சலித்துப் போய் பேசியிருப்பதும் கூட அவரது ஆதங்கத்தின்வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X