முதுமலை காட்டில் வீரப்பன் நடமாட்டம்?
ஈரோடு
முதுமலை வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகவும், மசினகுடி காவல் நிலையத்தை வீரப்பன் தாக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் வந்துள்ள தகவல்களையடுத்து முதுமலை வன விலங்குகள் சரணாலயப் பகுதியில்போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை மற்றும் கர்நாடக மாநலம் பந்திப்பூர் வன விலங்குகள் சரணாலய காட்டுப் பகுதியில் வீரப்பன்நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது. மேலும், முதுமலை காட்டுப் பகுதியில் உள்ளமசினகுடி காவல் நிலையத்தைத் தாக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்தை தாக்க முடியாவிட்டால் சுற்றுலாப் பயணிகளை அவன் கடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முதுமலை, பந்திப்பூர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள விடுதிகளில் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகள் தங்க கண்டிப்பாக அனுமதிதரக் கூடாது என்று போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மேலும், மசினகுடி காவல் நிலையத்திற்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications