வைகோ விஷயத்தில் வாஜ்பாய், அத்வானியை நம்பிப் பயனில்லை- கருணாநிதி
சென்னை:
வைகோ விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாயையும், துணைப் பிரதமர் அத்வானியையும் இனியும் நம்புவதில் எந்தப்பயனும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இதையொட்டி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில்கருணாநிதி தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கருணாநிதி பேசுகையில், வைகோ விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது.மெளனம்தான் அதற்குத் தெரிந்த ஒரே மொழி போலும். பொடா மீறல்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றுவாஜ்பாய் சில மாதங்களுக்கு ன்பு சொன்னார்.
அவரால் அவ்வளவுதான் முடியும். அவரது கூற்றுக்கேற்ப ஆய்வு செய்வதற்கு யாரும் (அத்வானி?) தடையாகஇருக்கிறார்களோ என்னவோ?
வைகோ உடனடியாக சிறையை விட்டு வெளியே வர வேண்டும். இல்லாவிட்டால், யார் யாரெல்லாம்(கூட்டணியைவிட்டு) வெளியேறுவார்களோ, அதை நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை.
பஞ்சாப் முன்னாள் தல்வர் பிரகாஷ் சிங் பாதல் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை என்று அத்வானி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்ல்ைலை.
தமிழ்நாட்டில் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் பொய்யான வழக்குகளின் பேரில் சோதனை நடத்தியபோதுஅதை பொறுக்க இயலவில்லை என்று நான் கூறி வந்தேன். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு பாதல்வீட்டில் நடந்ததை மட்டும் பொறுக்க முடியவில்லை என்று கூறுகிறவர்கள், திமுக விஷயத்தில் மட்டும் மட்டும்பொறுத்துக் கொண்டது ஏன்?
அதேபோல, பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தமிழகத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சித்தலைவர்களும் கூறி வரும் வேளையில் வட இந்தியாவிலிருந்து ஒரு தலைவர் கூட அதைக் கண்டித்து அறிக்கைவிடவில்லையே?. அது ஏன் என்று கேட்டார் கருணாநிதி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து திமுகவும், மதிமுகவும் வெளியேறத் தயார் என்பதை இக் கூட்டத்தில்கருணாநிதி மறைகமாக குறிப்பிட்டார்.