கோவையிலும் பாதாள அறையில் விபச்சாரம்: இரு பெண்கள் கைது
கோவை & விழுப்புரம்:
சென்னையில் நடந்ததைப் போலவே லாட்ஜில் பாதாள அறைகள் அமைத்து விபச்சாரம் நடத்திய கும்பல்கோவையில் பிடிபட்டது.
சென்னையில் அண்ணா சாலையில் உள்ள கம்பர்ட் லாட்ஜ் என்ற விடுதியில் சுரங்கப் பாதை அமைத்து, அதன்வழியே பாதாள அறைகளுக்குச் சென்று அழகிகளுடன் உல்லாசமாக இருக்க வசதி செய்து தரப்பட்டது.
இதே போல கோவையிலும் அன்னூர் பகுதியில் ஒரு லாட்ஜில் சுரங்க அறையில் விபச்சாரம் நடந்து வந்தது. இங்குதிடீர் சோதனை நடத்திய போலீசார் 2 பெண்களைக் கைது செய்தனர். புரோக்கர் ராஜசேகரன் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லாட்ஜின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார்.
அதே போல விழுப்புரம் காந்தி சிலை அருகே லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய கும்பல்பிடிபட்டது. ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமி (29), ரேகா (25) ஆகிய பெண்களும், புரோக்கர் ராமச்சந்திரன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகத்தெரிகிறது.