இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்க தடை
கோராக்பூர்:
2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடைசெய்யும் சட்டம் கொண்டு வர மத்திய அரசுபரிசீலனை செய்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய துணை பிரதமர் அத்வானி இதனைத்தெரிவித்தார்.
நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் ஆசைப்படி அயோத்தியில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். நாங்கள்ஆட்சிக்கு வந்த பின்னர் 205 ஐ. எஸ்.ஐ. முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புவலுப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஓடுக்கி வருகிறோம்.
பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இருதய ஆபரேஷன் பெங்களூரில் நடந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில்இந்த ஆபரேஷன் நடந்தாலும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்பட இது போன்ற விஷயங்கள் வழிவகுக்கும் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் இனிமேல் தேர்தலில் நிற்க தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தைகொண்டுவர பரிசீலனை செய்து வருகிறோம். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் சட்டமாக்குவது பற்றியும்பரிசீலனை செய்து வருகிறோம் என்றார்.